மலேசிய MH 17 பயணிகள் விமானம் உக்ரைனுக்கு மேலாக சென்றவேளை 2014 ஆம் ஆண்டு சிலை மாதம் 17 ஆம் திகதி ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாகி விழுந்து நொருங்கியதுடன் அதில் பயணிகள் அனைவரும் கொல்லபட்டனர்.
சில வாரங்களுக்கு முன்னர் மலேசிய MH 17 விமானம் குறித்து BBC செய்தி ஒன்றை வெளியிட்டது. அதில் உக்கிரைன் போர் விமானங்களே MH17 சுட்டு வீழ்த்தியது என்ற தகவலை வெளியிட்டிருந்தது.
இச்செய்தி வெளியாகி அதன் பரபரப்பு அடங்கும் முன்னரே இப்போது இந்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது கிரைமியா மாநிலத்தில் உள்ள நகரும் ஏவுகணைத் தளத்தில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை மூலம் வீழ்த்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் ரஷ்யாவின் 53 வது வான் காப்பு படைப்பிரிவின் “பக் ஏவுகணை தளம்” தற்போது உக்கிரைனில் உள்ள கிளர்சிப் படையிடம் உள்ளது என்றும். அதனை நேரில் கண்ட சிலர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
யுத்த தாங்கி போலவே காட்சியளிக்கும் இந்த நகரும் ஏவுகணைத் தளம் அதி தொழில் நுட்பவசதியும், வானில் பறக்கும் விமானங்களை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டதாகும்.
உக்கிரைனின் கிரைமியா மாநிலத்தை கைப்பற்றிய ரஷ்யா அதனை தனது நாட்டோடு இணைக்கும் முயற்சியில்ஈடுபட்டுள்ள நிலையில் அங்கு ரஷ்யாவுக்கு ஆதரவான படை ஒன்றை ரஷ்ய அதிபர் புட்டின் உருவாக்கி பல நவீன ஆயுதங்களையும் வழங்கியுள்ளார்.
தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி ரஷ்யாவுக்கு ஆதரவான படையினரே மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கூறப்படுகின்றது.
0 Comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி